பாராளுமன்ற அமைப்புகளுக்கு இடையிலான ஒன்றியத்தின் உறுப்பினர்
October 18 , 2022 643 days 329 0
145வது பாராளுமன்ற அமைப்புகளுக்கு இடையிலான ஒன்றியத்தின் பேரவை தற்போது ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவின் மக்களவை உறுப்பினர் அபராஜிதா சாரங்கி, இந்தப் பாராளுமன்ற அமைப்புகளுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சர்வதேசக் குழுவில் இந்தியா தனது பிரதிநிதியைக் கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
1887 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அமைப்புகளுக்கு இடைப்பட்ட ஒன்றியமானது நிறுவப் பட்டது.
தேசியப் பாராளுமன்றங்களின் இந்த உலகளாவிய அமைப்பு மொத்தம் 178 தேசிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.