TNPSC Thervupettagam

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகள்

April 2 , 2024 108 days 283 0
  • மதிப்பாய்வு செய்யப்பட்ட 514 மக்களவை பாராளுமன்ற உறுப்பினர்களுள் 225 (44%) பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளனர்.
  • தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்தச் சங்கத்தினால் (Association of Democratic Reforms - (ADR)) நன்கு ஆய்வு செய்யப்பட்ட சுய-உறுதிப் பத்திரங்களின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • மதிப்பாய்வு செய்யப்பட்டவர்களில், 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட 5% செல்வந்தர்கள் ஆவர்.
  • கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தற்போது பதவியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப் பட்டு உள்ளது.
  • இந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் பா.ஜ.க. கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • மேலும், தற்போது பதவியில் உள்ள 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் தங்கள் மீது பதிவாகியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் (21 பாராளுமன்ற உறுப்பினர்கள்) பா.ஜ.க. கட்சியினை  சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இதேபோல், தற்போது பதவியில் உள்ள 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது, மூன்று கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான மிகவும் கடுமையான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
  • உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளது.
  • 73% பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டதாரி அல்லது உயர் கல்வித் தகுதிகளைக் கொண்டுள்ள உறுப்பினர்கள் ஆவர், அதே சமயம் அப்பதவியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 15% பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்