பாரீஸ் அமைதி மன்றம் என்பது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கம் அற்ற பிரான்ஸ் நாட்டு அமைப்பாகும்.
"பல்வேறு நெருக்கடியிலிருந்து வெளியேறுதல்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இது உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பொதுச் சமூகம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தலைவர்களின் வருடாந்திரக் கூட்டத்தை நடத்துகிறது.
இந்த வருடாந்திர நிகழ்வின் குறிக்கோள், சர்வதேச மோதல்களை நேரடியாக நிவர்த்தி செய்வது அல்ல, ஆனால் தனியார் மற்றும் பொதுச் சமூகப்பங்காளர்கள் பலருக்கு இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான சர்வதேச அரங்கை வழங்கச் செய்வதாகும்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் உள்ள உலகப் பொருளாதார மன்றத்தில் பொருளாதாரம் மற்றும் நிதிப் பிரச்சினைகள் மற்றும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்புச் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன.