பார்ச்சூன் அமைப்பின் 2019 ஆம் ஆண்டின் வணிக நபர்கள் என்ற பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா, மாஸ்டர் கார்டு தலைமை நிர்வாக அதிகாரியான அஜய் பங்கா மற்றும் அரிஸ்டா நிறுவனத்தின் தலைவரான ஜெயஸ்ரீ உல்லால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் சத்யா நாதெல்லா முதலிடத்திலும் அஜய் பங்கா 8வது இடத்திலும் ஜெயஸ்ரீ உல்லால் 18வது இடத்திலும் உள்ளனர்.