TNPSC Thervupettagam

பார்பர்டன் கிரீன்ஸ்டோன் மண்டலம்

March 25 , 2024 116 days 249 0
  • 3.3 பில்லியன் ஆண்டுகள் அளவிலான பழமையான பாறைகளில் சில ஆரம்பகால நில நடுக்கங்களின் அறிகுறிகள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பாறைகள் ஆனது, புவியின் கண்ட மேலோடு ஆனது பெரிய தட்டுகளாகப் பிளவுபட்டு மூடகத்தின் மீது நகர்ந்து வருவதை விளக்குகின்ற கண்டத் தட்டுகள் பற்றிய ஆரம்பக் கட்ட ஆதாரங்களை வழங்குகின்றன.
  • உயிர்கள் முதன்முதலில் பரிணமித்த போது எப்படிப்பட்டச் சூழ்நிலைகள் இருந்து இருக்கும் என்பதையும் இந்தப் பாறைகள் சுட்டிக் காட்டுகின்றன.
  • தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சிக்கலான புவியியல் அமைப்பான பார்பர்டன் கிரீன்ஸ்டோன் மண்டலத்தினை ஆய்வு செய்த போது இந்த தகவல் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த மண்டலமானது நியூசிலாந்தில் உள்ள சமீபத்தில் உருவான (இளம்) பாறைகளை  போலவே உள்ளது.
  • அவை ஹிகுரங்கி கீழமிழ்தல் மண்டலத்தில் நிலநடுக்கத்தினால் தூண்டப்பட்ட நீரில் மூழ்கிய நிலச்சரிவுகளை எதிர்கொண்டுள்ளன.
  • அதன் பச்சை நிறத்தின் காரணமாக இப்பெயரினைப் பெற்ற பார்பர்டன் கிரீன் ஸ்டோன் மண்டலம் ஆனது, சுமார் 3.2 பில்லியன் மற்றும் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் மிக விரிவான புவியியல் பதிவுகளில் ஒன்றை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்