இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 07 ஆம் தேதி வரையில் பார்வைத் திறன் இழப்புத் தடுப்பு வாரத்தை அனுசரிக்கிறது.
இந்த முன்னெடுப்பு ஆனது பார்வைத் திறன் இழப்புத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வழக்கமான கண் பரிசோதனைகளை ஊக்குவிப்பது மற்றும் மிகவும் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவது போன்றவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பார்வைத் திறன் இழப்புத் தடுப்புக்கான தேசியச் சங்கம் ஆனது, ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜ் குமாரி அம்ரித் கௌர் ஆகியோரால் 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
பார்வைத் திறன் இழப்பு மற்றும் பார்வைக் குறைபாட்டால் இந்திய நாடு மட்டும் ஒரு ஆண்டுக்கு 54.4 பில்லியன் டாலர்களை இழக்கிறது.