அமெரிக்க செனட் சபையானது உலக சுகாதார அமைப்பில் (WHO -World Health Organization) தைவானைப் பார்வையாளர் நாடாக ஆக்கும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக, இதற்கான ஆதரவைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப் பட்டது.
இந்த மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது.
தற்பொழுது தைவான் சீனக் குடியரசினால் ஆளப் படுகின்றது.
எனினும், சீனா தனது “ஒற்றை சீனா என்ற கொள்கையின்” கீழ் தைவானை தன்னுடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாக உரிமை கோருகின்றது.