TNPSC Thervupettagam

பாலைவனமாக்கல் குறித்த தில்லிப் பிரகடனம்

September 15 , 2019 1771 days 571 0
  • பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் (UN Convention to Combat Desertification - UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாடானது (Conference of Parties - COP14) கிரேட்டர் நொய்டாவில் முடிவடைந்தது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் தில்லிப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.

  • UNCCDயின் COP14 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் நிலச் சீரழிவில் நடுநிலைமையை (Land Degradation Neutrality - LDN) அடைவதற்கான உறுதிப்பாட்டுடன் முடிவடைந்தது.
  • இத்தகைய நடுநிலைமையானது ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த உலகம் முழுவதும் போதுமான நிலம் இருப்பதை உறுதி செய்கிறது என்று ஐ.நாவால் வரையறுக்கப் படுகின்றது.
  • தில்லிப் பிரகடனம் என்பது ஒவ்வொரு நாடும் நிலச் சீரழிவில் நடுநிலைமையை எவ்வாறு அடைவது என்பது குறித்த உலகளாவிய நடவடிக்கையின் ஒரு அறிக்கையாகும்.
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் UNCCDயின் தலைவராக 2 ஆண்டு காலத்திற்கு நீடிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்