TNPSC Thervupettagam

பின் தங்கிய மாவட்டங்களின் மேம்பாடு

November 27 , 2017 2427 days 729 0
  • அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கோடு ஒத்திசையும் வகையில் மத்திய அரசு 115 பின்தங்கிய மாவட்டங்களை 2022ம் ஆண்டிற்குள் துரிதமாக மேம்படுத்திட தேர்வு செய்துள்ளது.
  • இந்த 115 பின் தங்கிய மாவட்டங்களில்
    • இடது சாரி பயங்கரவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்கள்
    • இடது சாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட 55 மாவட்டங்கள்
    • ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்கள்
-ஆகியவை அடங்கும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு பதவிகளில் உள்ள கூடுதல் செயலாளர்கள் மற்றும் கூட்டு செயலாளர்கள் என்ற உயர்மட்ட அளவில் உள்ள மூத்த அதிகாரிகள் “பிரபஹாரி “என்ற பெயரில் நியமிக்கப்படுகின்றார்கள்.
  • பிரபஹாரி அலுவலர்களின் முதல் கூட்டம் சமீபத்தில் புதுதில்லியில் அமைச்சரவை செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
  • மனித வளர்ச்சிக் குறியீட்டில் வியத்தகு மேம்பாடு அடையவும், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையை மேம்படுத்திடவும், இந்த பின் தங்கிய மாவட்டங்களின் மேம்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்