TNPSC Thervupettagam

பிபாவின் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது

September 27 , 2018 2154 days 605 0
  • ஒரு தசாப்தமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரால் மேலாதிக்கம் செய்யப்பட்டு வந்த பிபாவின் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை லுகா மாட்ரிக் வென்றுள்ளார்.
  • லிவர்பூல்லின் எகிப்திய முன்கள வீரரான முகமது சலா மற்றும் ரொனால்டோவை மாட்ரிக் முந்தியுள்ளார்.
  • இவர் ரியல் மாட்ரிட் உடன் இணைந்து 5 பருவங்களில் 4  முறை சாம்பியன் லீக்கை வென்றதற்காகவும் குரோஷியாவை உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வழிநடத்தியதற்காகவும் பிபாவின் 2017-18 பருவத்தின் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் மட்டுமே உலக கால்பந்தாட்டத்தின் பிரதான தனிநபர் விருதை 2008 முதல் பல்வேறு முறைகளில் பிபாவிடம் இருந்து பெற்றுள்ளனர். இருவரும் தலா ஐந்து முறை பட்டங்களை வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்