TNPSC Thervupettagam

பிரக்ஞானந்தாவின் வெற்றி

February 25 , 2022 876 days 515 0
  • இந்தியாவில் சென்னையினைச் சேர்ந்த ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா ஒரு புகழ்பெற்ற உலகச் சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி உள்ளார்.
  • இணையவழியாக நடைபெற்று வரும் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் என்ற செஸ் போட்டியின் முதல்நிலைப் போட்டியின் 8வது சுற்றில் இவர் இந்த வெற்றியைப் பெற்றார்.
  • 16 வயதான பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டாலா ஹரி கிருஷ்ணா ஆகியோரையடுத்து மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய மூன்றாவது இந்தியராக ஆனார்.
  • மேக்னஸ் கார்ல்சென் 5 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற நார்வே நாட்டின் ஒரு கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
  • இவர் 3 முறை உலக விரைவு சதுரங்க சாம்பியன்சிப் போட்டியினையும் 5 முறை உலக பிளிட்ஸ் சதுரங்கப் போட்டியினையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்