கேரள மாநில அரசு பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றது.
வெளிநாடு வாழ் மலையாளிகளின் நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் வெளிநாடு வாழ் கேரள மக்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்கள் ரூ.5 இலட்சத்தை ஒரே தவணை முறையாக இதற்குச் செலுத்த வேண்டும்.
இந்த ஒரு தவணை முறையிலான பணம் செலுத்துதலானது கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி மன்ற வங்கியில் (KIIFB - Kerala Infrastructure Investment Fund Board) இருப்பு வைக்கப்படும்.