TNPSC Thervupettagam

பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு 2024

March 16 , 2024 125 days 287 0
  • ஜப்பானிய கட்டிடக் கலைஞரான ரிகன் யமமோட்டோ 2024 ஆம் ஆண்டு பிரிட்ஸ்கர் கட்டிடக் கலை பரிசை வென்றுள்ளார்.
  • இது "கட்டிடக்கலைத் துறையின் நோபல் பரிசு" என்று குறிப்பிடப்படுகின்ற கட்டிடக் கலைத் துறையின் மிக உயர்ந்த சர்வதேச விருது ஆகும்.
  • 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பரிசு வழங்கப் படுகிறது.
  • யமமோட்டோ, இந்தப் பரிசினைப் பெற்ற ஒன்பதாவது ஜப்பானிய நாட்டவர் ஆவார்.
  • இந்த விருது ஆனது, கட்டிடக்கலை மூலம் மனிதகுலம் மற்றும் கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு வழங்கப்படும் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிய, திறமை, தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப் படுத்தும் ஒரு கட்டிடக் கலைஞரைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்