அனுபவம் வாய்ந்த கட்டிடக் கலைஞர்களான யுவோன் ஃபாரெல் மற்றும் ஷெல்லி மெக்னமாரா (Yvonne Farrell and Shelley McNamara) ஆகியோர் சமீபத்தில் 2020 பிரிட்ஸ்கர் பரிசிற்கான விருதாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
டப்ளினைச் சார்ந்த கட்டடக் கலை நிபுணர்களான இவர்கள் உலகளாவிய மதிப்புமிக்க இவ்விருதைப் பகிர்ந்து கொண்ட முதல் இரண்டு பெண்கள் ஆவர்.
அவர்களின் குறிப்பிடத்தக்கத் திட்டங்களில் பெருவின் லிமாவில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் அடங்கும். இது ரிபா என்ற சர்வதேசப் பரிசையும் வென்றுயுள்ளது.
இது “நவீனக்கால மச்சு பிச்சு” (modern-day Machu Picchu) என்றும் குறிப்பிடப் படுகிறது.
பிரிட்ஸ்கர் கட்டிடக் கலைப் பரிசானது ஆண்டுதோறும் "வாழும் கட்டிடக் கலைஞர் அல்லது கட்டிடக் கலைஞர்களைக் கெளரவிப்பதற்காக" வழங்கப் படுகிறது.
இது பெரும்பாலும் கட்டிடக்கலைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப் படுகிறது.
1979 ஆம் ஆண்டில் ஜே ஏ. பிரிட்ஸ்கர் மற்றும் அவரது மனைவி சிண்டி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த விருதிற்கு பிரிட்ஸ்கர் குடும்பத்தினராலும் ஹையாட் அறக்கட்டளையினாலும் நிதியுதவி அளிக்கப் படுகிறது.