TNPSC Thervupettagam

பிரித்வி இடைமறிப்பு ஏவுகணை சோதனை

September 25 , 2018 2125 days 741 0
  • ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் இந்தியா தனது இடைமறிப்பு ஏவுகணை சோதனையை இரவில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதன் மூலம் DRDO ஆனது இரண்டு அடுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்குவதில் புதிய மைல் கல்லை அடைந்துள்ளது.
  • இது இரண்டு நிலையுடைய ஏவுகணையாகும் மற்றும் இரண்டு அடுக்குகளும் திட உந்து எரிபொருளால் இயங்குவதாகும்.
  • இது பூமியின் வளிமண்டலத்தின் 50 கி.மீ உயரத்தில் வெளிப்புற வளிமண்டல பகுதியில் உள்ள இலக்குகளுக்கு பயன்படுத்துவதற்காக வடிமைக்கப்பட்டுள்ளது.
  • இது ஏற்கனவே உபயோகத்திலிருந்கும் பிரித்வி வான் பாதுகாப்பு (Prithvi Air Defence-PAD)/மேம்பட்ட வான் பாதுகாப்பு (Advanced Air Defence-AAD) கூட்டிணைவிலுள்ள பிரித்வியை மாற்றுவதை நோக்கமாக உடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்