பிரேசிலின் புதிய அதிபராக லூலா டா சில்வா சமீபத்தில் மீண்டும் பதவியேற்றார்.
இவர் தற்போதைய தீவிர வலதுசாரி கட்சி சார்ந்த அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை வீழ்த்தியுள்ளார்.
இவர் 2002 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இரண்டு முறை பிரேசில் அதிபராகப் பணியாற்றினார்.
இவர் அதிபராகப் பணியாற்றிய அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில், பிரேசில் ஒரு பெரிய பொருளாதார முன்னேற்றத்தினைக் கண்டதோடு மட்டுமல்லாமல் மேலும், மில்லியன் கணக்கான மக்களை வறுமை நிலையில் இருந்து தரம் உயர்த்திய பல்வேறு சமூக நலத் திட்டங்கள் இவர் ஆட்சியில் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டன.
இந்த சமூக நலத் திட்டங்களில் மிகவும் பிரபலமானது போல்சா ஃபேமிலியா ஆகும்.
ஏழைக் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பினாலும், அவர்களுக்குத் தொடர்ந்து உடல்நலப் பரிசோதனைகள் செய்தாலும் அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது.