பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தம்) மசோதா, 2023
July 30 , 2023
358 days
208
- இந்திய அரசாங்கமானது, 2023 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தம்) மசோதாவினை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
- புதிய மசோதாவானது, பிறப்புச் சான்றிதழுக்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.
- இந்த நடவடிக்கையானது 1969 ஆம் ஆண்டு அசல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.
- இந்த முன்மொழியப்பட்டத் திருத்தமானது, குழந்தைப் பிறப்பிற்கானப் பதிவின் போது பெற்றோர்கள் மற்றும் தகவல் அளிப்பவர்களின் ஆதார் எண்கள் தேவை என்று கூறுகிறது.
- இறப்புப் பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கலை விரைவுபடுத்துவதற்குச் சிறப்பு “சார் பதிவாளர்கள்” நியமனத்தையும் இம்மசோதா முன்மொழிகிறது.
- ஒரு பதிவாளரை அந்த நபருக்கு ஏழு நாட்களில் இம்மாதிரியான சான்றிதழை வழங்க செய்யுமாறு இது எண்ணுகிறது.
- இது பிரதி எடுக்கும் வகையிலானச் சான்றிதழ்களுக்குப் பதிலாக எண்ம ரீதியிலான பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழை வழங்கிட எண்ணுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/30-250.jpg)
Post Views:
208