TNPSC Thervupettagam

புதிய தேசிய ஓய்வூதியத் திட்ட விதிகள்

November 5 , 2019 1720 days 640 0
  • தற்பொழுது வெளிநாடு வாழ் இந்தியர்கள் (OCI - Overseas Citizens of India) தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension System - NPS) முதலீடு செய்ய அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள்.
  • தேசிய ஓய்வூதிய முறைமை என்பது இந்தியாவில் தன்னார்வப் பங்களிப்பு முறையில்  வரையறுக்கப்பட்ட ஒரு பங்களிப்பு ஓய்வூதிய முறையாகும்.
  • 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1க்குப் பிறகு சேர்ந்த இந்திய அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை நிறுத்துவதற்கான இந்திய அரசின் முடிவின் காரணமாக NPS தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப் பட்டிருந்தாலும், 2009 ஆம் ஆண்டிலிருந்து 18 முதல் 60 வயதுக்குட்பட்ட இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் இதில் அனுமதியளிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று இந்திய அரசால் நிறுவப் பட்டது.
  • PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய முறைமையை ஒழுங்குபடுத்தி அதனை நிர்வகிக்கின்றது. மேலும் இது இந்திய அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட,  அமைப்புசாரா துறைக்காக வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டப் பலன்களான அடல் ஓய்வூதியத் திட்டத்தையும் நிர்வகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்