வங்க தேசத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக நெறிமுறையின் இரண்டாவது ஒப்பந்தத்தில் இந்தியாவும் வங்க தேசமும் கையெழுத்திட்டுள்ளன.
இது பூடான் சரக்குகள், கற்சில்லுகள் மற்றும் வடகிழக்கு மாநிலத்தின் சரக்குகளை வங்க தேசத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டி உதவ இருக்கின்றது.
இது வங்கதேசம் மற்றும் கீழை அசாமின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய இருக்கின்றது.
இந்த 2 நாடுகளும் 4 புதிய வழிகளுடன் திரிபுராவில் கோமதி நதியின் மீது சோனமுரா-தௌத்கண்டி வழி மற்றும் வங்க தேசத்தில் ராஜ்சஹி – துளியன் – ராஜ்சஹி வழி ஆகியவற்றை இந்தியா – வங்கதேச நெறிமுறை வழிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மையா, கோலாகாட், சோனமுரா, துளியன் மற்றும் ஜோகிகோபா ஆகியவை இந்தியாவிடம் உள்ள 5 புதிய வழிப் பாதைத் துறைமுகங்களாகும்.
வங்க தேசத்திடம் சுல்தான்கன்ஞ், ராஜ்சாஹி, சில்மாரி, பகதூராபாத் மற்றும் தௌத்கண்டி ஆகிய வழிப் பாதைத் துறைமுகங்கள் உள்ளன.
ஜோகிகோபாவின் இணைப்பானது மேகாலயா, பூடான் மற்றும் அசாம் ஆகியவற்றோடுத் தொடர்பை ஏற்படுத்த உதவ இருக்கின்றது.
தற்பொழுது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே வழிப் பாதை துறைமுகங்கள் 6 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன.
இந்தியாவிடம் ஹால்தியா, கொல்கத்தா, பாண்டு, கரீம்கஞ்ச், துப்ரி மற்றும் சில்காட் ஆகியவை உள்ளன.
வங்க தேசத்திடம், குல்னா, நாராயண்கஞ்ச், சிராஜ்கஞ்ச், மோங்லா, பங்கோன் மற்றும் அசுகஞ்ச் ஆகியவை உள்ளன.