மெட்ராஸ் உயர் நீதிமன்றமானது ஆட்சியாளர் / துணை நிலை ஆளுநராகச் செயல்படுபவர் புதுச்சேரி அரசாங்கத்தின் நடவடிக்கையில் தன்னிச்சையாகவோ, மறைமுகமாகவோ தலையிட அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் சரத்து 239AA ஆனது தில்லி சட்டமன்றத்தின் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
எனவே சட்ட ஒழுங்கு மற்றும் நிலம் ஆகியவற்றின் மீது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் சரத்து 239A ஆனது புதுச்சேரி சட்டமன்றத்தின் மீது எந்தவொரு வெளிப்படையான கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
ஆனால் இந்தச் சட்டமானது ஒன்றியப் பிரதேசத்தின் ஆட்சியாளருக்கான எந்தவொரு சிறப்பு அதிகாரங்கள் குறித்தும் குறிப்பிடவில்லை.