TNPSC Thervupettagam

புதைபடிவத்திலிருந்து டிஎன்ஏவைப் பிரித்தெடுப்பதற்கான ஊடுருவல் சாராத முறை

May 16 , 2023 432 days 217 0
  • அறிவியலாளர்கள் சிதைவுறா டிஎன்ஏ பிரித்தெடுப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இதில், புதைப்படிவப் பொருள்கள் சோடியம் பாஸ்பேட் இடையகக் கரைசலில் மூழ்க வைக்கப் பட்டு, பிறகு அதன் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது.
  • பழங்கால எலும்பு மற்றும் பல் பொருட்களில் சிக்கியுள்ள டிஎன்ஏ கரைசலில் வெளியிடப் பட்டு, மேலும் வரிசைப்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
  • கலைப்பொருட்களை 90 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கழுவுவதன் மூலம், கலைப் பொருட்களை அப்படியே வைத்திருக்கும் வகையில், கழுவும் நீரில் இருந்து டிஎன்ஏவைப் பிரித்தெடுக்க முடியும்.
  • ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதிய முறையை டெனிசோவா குகையில் இருந்து பெறப் பட்ட ஒரு மான் பல்லினால் செய்யப்பட்ட ஒரு கலைப் பொருளில் பயன்படுத்தி, ஒரு வாபிடி (மரை காட்டு மான் இனங்கள்) மற்றும் ஒரு பண்டைய மனிதனின் டிஎன்ஏவை மீட்டெடுக்க முடிந்தது.
  • டிஎன்ஏ பகுப்பாய்வுகள் அந்தப் பொருளின் காலத்தினை சுமார் 19,000-25,000 ஆண்டுகள் என மதிப்பிட வழி வகுத்தன.
  • பொதுவாக, பழங்கால எலும்புக் கூடுகளிலிருந்து டிஎன்ஏ பிரித்தெடுத்தல் ஆனது மிகச் சேதாரம் உண்டாக்கக் கூடியதாக இருக்கலாம் அல்லது அந்த மாதிரிகளை வெகுவாக மாற்றி அமைக்கக் கூடியதாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்