TNPSC Thervupettagam

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மத்திய அமைச்சரவை

August 31 , 2018 2153 days 589 0
  • இரயில்வே துறையில் அறிவியல் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மற்றும் மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் கொரிய குடியரசின் இரயில்வே ஆராய்ச்சி அமைப்புகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கிடையேயான திருத்தப்பட்ட விமான சேவைகளின் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒத்துழைப்பு செயல்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வர்த்தக ஒத்துழைப்பு செயல்திட்டமானது இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்