TNPSC Thervupettagam

புலம்பெயர்ந்தோருக்கான மோசமான ஆண்டு – 2023

March 13 , 2024 128 days 188 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் புலம்பெயரும் வழித் தடங்களில் உலகளவில் குறைந்தபட்சம் 8,565 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பத்தாண்டுகளுக்கு முன்பு இது குறித்த பதிவுகள் தொடங்கப் பட்டதிலிருந்து 2023 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 2016 ஆம் ஆண்டில் புலம்பெயர்தலின் போது பதிவான முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையினை (8,084 பேர்) முறியடித்தது.
  • வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தெற்கு ஐரோப்பாவை அடைய புலம் பெயர் நபர்கள் முயற்சிக்கும் மத்தியத் தரைக் கடல் பகுதியானது, புலம்பெயர்ந்தோருக்கு ஆபத்தான பாதையாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்