TNPSC Thervupettagam

புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் முதல் நாடாக நேபாளம்

September 30 , 2018 2153 days 628 0
  • இயற்கைக்கான உலகளாவிய நிதி (WWF – World Wide Fund for Nature) என்ற அமைப்பின் Tx2 என்ற திட்டத்தின் படி பத்தாண்டுக் காலத்தில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் உலகின் முதல் நாடாக நேபாளம் உருவெடுத்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்குள்ளாக உலகம் முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க Tx2 என்ற திட்டம் எண்ணுகிறது.
  • 2009 ஆம் ஆண்டில் இருந்த 121 புலிகள் என்ற எண்ணிக்கையில் இருந்து தற்பொழுது நேபாளத்தில் 235 காட்டுப் புலிகள் உள்ளன என மதிப்பிடப் பட்டிருக்கின்றது.
  • புலிகள் பாதுகாப்பிற்காக உத்தரவாதமளிக்கப்பட்ட நிர்ணயங்கள் என்ற சான்றளிப்புத் திட்டத்தின்படி (Conservation Assured Tiger Standards - CA|TS) புலிகள் வாழ்விடப் பகுதிகளை மேலாண்மை செய்வதில் உலகத் தரத்தை அடைந்த முதல் நாடு நேபாளம் ஆகும்.
  • இத்திட்டம் 2010ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இயற்கைக்கான உலகளாவிய நிதி என்ற அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்