போரினால் முற்றுகையிடப்பட்ட உக்ரேனிய நகரமான மரியுபோல் குறித்த பல்வேறுத் தகவல்களை போர்க்கால அடிப்படையில் வெளியிட்டதற்காகப் பொதுச் சேவைக்கான 2023 ஆம் ஆண்டின் புலிட்சர் பரிசை அசோசியேட்டட் பிரஸ் பத்திரிக்கை வென்றது.
அமெரிக்காவினைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் அல்லது அமைப்பு பெறக் கூடிய மிக உயர்ந்த கௌரவமாக புலிட்சர் பரிசு கருதப்படுகிறது.
இந்த வருடாந்திர புலிட்சர் விருதுகள் முதன்முதலில் 1917 ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது.
புலிட்சர் பரிசானது புத்தகங்கள், இசை மற்றும் நாடகம் ஆகியவற்றிற்கு எட்டு முக்கியப் பிரிவுகளில் வழங்கப் படுகிறது.