ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 3 புகைப்படக் கலைஞர்கள் புகைப்படத் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசனை வென்றுள்ளனர்.
யாசின் தர், முக்தர் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகியோர் இந்த விருதினை வென்றுள்ளனர்.
இந்த விருதானது 1917 ஆம் ஆண்டில் ஜோசப் புலிட்சரால் ஏற்படுத்தப் பட்டது.
இந்த விருதானது கொலம்பியா பல்கலைக் கழகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றது.
இது புத்தக வெளியீடு, பத்திரிக்கை, நிகழ்நேர/இணையப் பத்திரிக்கைத் துறை, இசைத் தொகுப்பு மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் நிகழ்த்தப் பட்ட சாதனைகளுக்காக வழங்கப் படுகின்றது.