2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசானது பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.
வெற்றியாளர்கள் பட்டியலில் செய்தித் தாள் பிரிவில் இந்தியரான அட்னன் அபிதி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் டேவ் மற்றும் ராய்ட்டர்ஸ் இதழின் மறைந்த டேனிஷ் சித்திக் ஆகியோர் உட்பட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையும் இடம் பெற்றது.
இந்தியாவில் இரண்டாவது கோவிட்-19 பெருந்தொற்றின் போது நகரும் புகைப் படங்களை எடுத்ததற்காக டேனிஷ் சித்திக் இரண்டாவது முறையாக 2022 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசினைப் பெற்றார்.
2022 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசு இவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
இவர் 2021 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று தனது 38 வயதில் காலமானார்.
இந்த மதிப்பிற்குரியப் புகைப்படக்கலைஞர் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியது குறித்து செய்தி சேகரிக்கும் போது உயிரிழந்தார்.