புல்வாய் இனங்களின் கணக்கெடுப்பு
July 23 , 2022
729 days
387
- ஆந்திரப் பிரதேச மாநில வனவிலங்குத் துறையானது புல்வாய் இனங்கள் பற்றிய முதல் கணக்கெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
- இது தௌலேஸ்வரம் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகள் இடையே, கோதாவரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள உள்ள தீவுப் பகுதிகளில் நடத்தப்பட்டது.
- இந்தியப் புல்வாய் ஆனது ஒரு மறிமான் இனமாகும்.
- தற்போது உயிருடன் உள்ள மறிமான் இனத்தினைச் சேர்ந்த ஒரே ஒரு உயிரினம் இதுவாகும்.
- சிறுத்தைப் புலிக்கு அடுத்தபடியாக உலகின் அதிவேக விலங்காக இது கருதப் படுகிறது.
- இது IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் குறைந்த அளவே கவனம் செலுத்தப் படும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலத்தின் பிஷ்னோய் சமூகத்தினர் புல்வாய் இனங்களின் பாதுகாப்பு முயற்சிகளுக்காக வேண்டி உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகின்றனர்.
Post Views:
387