பிரபல இந்திய-அமெரிக்க கணிதவியலாளரும் புள்ளியியல் நிபுணருமான கலியம்புடி ராதாகிருஷ்ண ராவ் (102) புள்ளியியல் துறையில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பரிசினைப் பெற உள்ளார்.
இது இத்துறையில் வழங்கப்படும் நோபல் பரிசுக்குச் சமமான பரிசாகும்.
75 ஆண்டுகளுக்கு முன்பு, புள்ளி விவரங்கள் சார்ந்த கருத்தாக்கத்தில் புரட்சியை ஏற்படுத்திய அவரது மகத்தானப் பணிக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
1945 ஆம் ஆண்டில், கொல்கத்தா கணிதச் சங்கத்தின் இதழின் அறிக்கைத் தாளில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
அதில் அவர் நவீனப் புள்ளியியல் துறைக்கு வழி வகுத்த மூன்று அடிப்படைத் தீர்வுகளை ஒரு செயல் விளக்கம் செய்து காட்டி, இன்று அறிவியலில் பெரிதும் பயன்படுத்தப்படும் புள்ளியியல் செயற்கருவிகளை அன்றே வழங்கினார்.
இவர் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
அவருக்கு இந்திய அரசினால் பத்ம பூஷன் (1968) மற்றும் பத்ம விபூஷன் (2001) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
புள்ளியியல் துறைக்கான முதல் சர்வதேசப் பரிசானது, 2017 ஆம் ஆண்டில் டேவிட் ஆர் காக்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது.