பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பு அறக்கட்டளை அமைப்பானது புவி காப்பாளர் என்ற விருதினைப் பெற்றுள்ளது.
இந்த விருதானது நாட்வெஸ்ட் குழுமத்தினால் நிறுவப்பட்டது.
பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பு அறக்கட்டளையானது வனத்துறையின் கீழ் இயங்கும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
இது பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்காப்பினை மேற்கொள்கிறது.
பரம்பிக்குளம் புலிகள் காப்பகமானது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இது 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்தச் சரணாலயமானது ஆனைமலைக் குன்றுகள் மற்றும் நெல்லியம்பதி குன்றுகள் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட சுங்கம் குன்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இவ்விருதுக்கான கருத்துருவானது "Biodiversity - a resilient nature is a foundation on which all climate mitigation and adaptation efforts must be raised" என்பதாகும்.