TNPSC Thervupettagam
March 31 , 2020 1574 days 620 0
  • 2020 ஆம் ஆண்டின் புவி நேரமானது மார்ச் 28 ஆம் தேதியன்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அனுசரிக்கப்பட்டது.
  • புவி நேரம் என்பது சர்வதேச இயற்கை நிதியத்தினால் (WWF - World Wide Fund for Nature) ஒருங்கிணைக்கப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.
  • புவி நேரமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக் கிழமையன்று நிகழ்கின்றது.
  • இது இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 2007 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் “விளக்குகளை அணைத்தல்” என்ற ஒரு நிகழ்வாகத் தொடங்கப்பட்டது.
  • இந்த நிகழ்வானது அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைப்பதற்காக தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் வணிகர்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தப் புவி நேரத்தின் முக்கியமான நோக்கம் புவி வெப்பமயமாதல், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்துப் பிரச்சாரம் மேற்கொள்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்