2021 ஆம் ஆண்டின் பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினமானது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்னதாக ஜூலை 29 அன்று நிகழ்ந்தது.
மாசு உமிழ்வுகளின் அதிகரிப்பு மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க இழப்புகள் ஆகியவற்றின் காரணமாக இது முன்னதாகவே ஏற்பட்டுள்ளது.
இந்த தேதியானது உலகளாவியத் தடப்பிணையம் என்ற அமைப்பினால் ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்கப் படுகிறது.
புவியானது ஒரு வருடத்திற்குத் தேவையான இயற்கை வளங்களை ஒரு ஆண்டில் மீண்டும் தயாரிப்பதற்குள் அவற்றை மனித இனம் முழுமையாகப் பயன்படுத்திய ஒரு தினமே பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினமாகும்.
பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் எனும் கருத்துருவாக்கமானது ஆன்ட்ரூ சிம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.