TNPSC Thervupettagam

பெண்களுக்கென்று தனி காவல்துறை பிரிவு

March 18 , 2019 1951 days 626 0
  • தமிழ்நாடு அரசானது உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளை செயல்படுத்தும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களை திறம்பட கையாள்வதற்காக தனி காவல்துறை பிரிவை உருவாக்கியுள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதிலும் நிகழும் அனைத்து வகையான குற்றங்களையும் கண்காணித்தல், குற்ற வடிவங்களை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான திறன்வாய்ந்த யுக்திகளை உருவாக்குதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
  • இந்த பிரத்தியேக பிரிவானது, கூடுதல் DGP நிலையில் உள்ள அதிகாரியை தலைவராகவும் 3 காவல்துறை கண்காணிப்பாளர்களையும் கொண்டிருக்கும்.
  • இந்த பிரிவானது குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த குற்றங்களையும் கையாளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்