பெண்கள் குறித்த 4வது உலகக் கருத்தரங்கின் 25வது நினைவு தினம்
October 8 , 2020 1419 days 576 0
2020 ஆம் ஆண்டில், உலக சமூகமானது பெண்கள் குறித்த 4வது உலகக் கருத்தரங்கின் 25வது நினைவு தினத்தையும் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டுத் தளம் (1995) ஏற்றுக் கொள்ளப் பட்டதையும் குறிக்கின்றது.
1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் ஐக்கிய நாடுகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கிற்கான பெயர் “பெண்கள் குறித்த 4வது உலகக் கருத்தரங்கு : சமத்துவம், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான நடவடிக்கை” என்று வைக்கப் பட்டது.
இந்தக் கருத்தரங்கில், உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் செயல்திட்ட நடவடிக்கைக்கான பெய்ஜிங் தளம் எனப்படும் உலகளாவிய சட்டப்படியான சமத்துவத்தை அடைவதற்காக ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டன.
பெண்கள் குறித்த முதலாவது உலகக் கருத்தரங்கானது 1975 ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரில் நடத்தப் பட்டது. இதற்கு அடுத்து இந்த கருத்தரங்கு கோப்பன்ஹேகன், நைரோபி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.