அடுத்த உலகளாவியப் பெருந்தொற்றினைக் கையாள வேண்டி, ஜி20 அமைப்பின் சுகாதார மற்றும் நிதி அமைச்சர்கள் 1.4 டாலர் பில்லியன் அளவிலான பெருந்தொற்று நிதியினைத் துவக்கி வைத்தனர்.
ஜி20 அமைப்பு உறுப்பினர்களும் ஜி20 அல்லாத உறுப்பினர்களும் சில அறக்கட்டளை அமைப்புகளும் இந்த நிதிக்குப் பங்களிப்பு செய்துள்ளன.
இது ஜி20 தலைமைப் பதவிகளில் முறையே இந்தோனேசியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைமைப் பதவியின் மேம்படுத்தப்பட்டது.
அமெரிக்கப் பேரரசு அதில் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு 450 மில்லியன் டாலர் நிதியினைப் பங்களித்து இருக்கின்றது.
முதல்முறையாக சர்வதேசச் சமூகம் வளரும் நாடுகளில் பெருந்தொற்றைத் தடுத்தல், முன்கூட்டிய தயாரிப்பு மற்றும் பதிலெதிர் நடவடிக்கை ஆகியவற்றுக்கு என்று முதலீடு செய்வதற்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிதியளிப்பு முறைக்கு ஒன்று கூடி இருக்கின்றது.