எண்ணெய்க் கசிவின் காரணமாக பெரு நாட்டில் சமீபத்தில் ஒரு சுற்றுச்சூழல் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இந்த அவசரநிலையானது 90 நாட்கள் வரை நீடிக்கும்.
சுமார் ஆறாயிரம் பீப்பாய்கள் அடங்கிய எண்ணெய் பசிபிக் பெருங்கடலில் கலந்தது.
ரெப்சோல் எனும் ஸ்பெயின் நாட்டு எரிசக்தி நிறுவனத்தின் கொள்கலன் கப்பலானது, பெருவில் உள்ள வந்தினல்லா சுத்திகரிப்பு (Vantinalla refinery) ஆலைக்கு எண்ணெய்ப் பீப்பாய்களை ஏற்றிச் சென்றது.
இக்கப்பலின் பெயர் “மேரே டோரிகம்” என்பதாகும்.
இது ஓர் இத்தாலியக் கப்பலாகும்.
கடலுக்கு அடியில் உள்ள டோங்கா எரிமலை வெடித்ததன் காரணமாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.