TNPSC Thervupettagam

பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ: நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்

September 7 , 2019 1778 days 1011 0
  • 2014-15 ஆம் ஆண்டில் 918 புள்ளிகளாக இருந்த பாலின விகிதம் 2018-19 ஆம் ஆண்டில் 13 புள்ளிகள் அதிகரித்து 931 புள்ளிகளாக உள்ளது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.
  • பிறப்பின் போது பாலின விகிதத்தை மேம்படுத்தியதற்காக பத்து மாவட்டங்கள் கௌரவிக்கப்பட்டன.
    • இந்தப் பிரிவில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ (Beti Bachao Beti Padhao - BBBP) திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டதற்காகப் பத்து மாவட்டங்கள் கௌரவிக்கப்பட்டன.
    • இந்தப் பிரிவில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக திருவள்ளூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்