TNPSC Thervupettagam

பேரிடரை முன்கூட்டியே தவிர்க்க குழு அமைப்பு

October 23 , 2018 2096 days 640 0
  • தமிழக அரசானது பொதுப் பணித்துறைச் செயலாளர் தலைமையிலான பத்து உறுப்பினர்களைக் கொண்ட துணைக் குழுவை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவானது முல்லைப் பெரியாறு அணை சம்பந்தப்பட்ட பேரிடர்களை முன்கூட்டியே தடுப்பதற்கென உயர்மட்ட தயார் நிலையை பராமரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
  • தேனி மாவட்ட ஆட்சியர் (இவரின் அதிகார எல்லைக்குள் அணை அமைந்துள்ளது) இக்குழுவின் துணைத்தலைவர் ஆவார்.
  • தேனியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இக்குழுவானது அணையின் பாதுகாப்பிற்கென ஏற்படுத்தப்பட்ட நான்காவது குழுவாகும்.
  • 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் அணையானது அனைத்து அளவுருக்களிலும் பாதுகாப்பாக இருப்பதாக நீதிபதி A.S. ஆனந்த் தலைமையிலான உச்சநீதிமன்றக்குழு சான்றளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்