உயிரியல் வல்லுநரான ஹலீஸ் இப்ராஹிமி என்பவர், தான் புதிதாகக் கண்டறிந்தப் பூச்சிக்கு கொரோனா வைரஸ் நினைவாக ஒரு பெயர் சூட்டியுள்ளார்.
இந்த பூச்சி இனங்கள் “Accursed Mountains” (சபிக்கப்பட்ட மலைகள்) பகுதிகளில் (கொசோவாவின் மேற்கத்திய ஜெஸ்கெத் இ நெமுனா தேசியப் பூங்கா) காணப் படுகின்றன.
இவற்றிற்கு தற்போது “பொட்டேமோபைலக்ஸ் கொரோனா வைரஸ்” எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இப்பூச்சி இனங்கள் இந்த தேசியப் பூங்கா பகுதியைச் சேர்ந்த பூர்வீக இனங்களாகும்.
இந்தப் புதிய பூச்சி இனங்கள் திறந்தவெளி மற்றும் கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரையிலான உயர்மட்டப் பகுதிகளில் வாழும் சிறிய பூச்சிகளாகும்.
கேடிஸ்ஃப்ளை இனங்கள் (Caddisfly species) பற்றிய அவரது ஆய்வின் போது நீர்மின் நிலையம் கட்டப்பட்டதனால் டெகானிட் நதியானது கடுமையாக மோசமடைந்து வருவதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
அந்த நதியின் குறுக்கே நீர்மின் நிலையம் அமைப்பதால் ஏற்படும் விளைவானது, மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்திற்குச் சமமானதாகும்.
எனவே, அங்கு கண்டறியப்பட்ட இப்புதிய இனத்திற்கு கொரோனா வைரசின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
டெகனைட் நதி
இது வொயிட் டிரின் நதியின் கிளை ஆறு ஆகும்.
வைசோகி டெகானியின் மடாலயம் டெகானைட் நதிக்கரையில் அமைந்துள்ளது.