TNPSC Thervupettagam

பொதுச் சொத்து சேதம் தொடர்பான சட்ட ஆணைய அறிக்கை

February 10 , 2024 161 days 278 0
  • ஓய்வு பெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான சட்டக் குழு, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதில் ஈடுபடுபவர்கள் பிணை ஆணை பெறுவதில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழிந்துள்ளது.
  • பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவதில் ஈடுபட்டவர்கள், அவர்களால் ஏற்படும் இழப்புக்கு இணையான பணத்தை வைப்பு வைத்த பின்னரே பிணை ஆணை பெற வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • 1984 ஆம் ஆண்டு பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  • பொதுச் சொத்துக்களுக்கு நீண்டகாலமாக வேண்டுமென்றே இடையூறு விளைவித்தல் போன்ற பல செயல்களைக் கையாள்வதற்காக ஒரு தனிச் சட்டம் இயற்றுவதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்