சத்தீஸ்கர் மாநில அரசு, தனது மாநிலத்தில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கு அளித்திருந்த பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றிருக்கின்றது.
ஏற்கெனவே விசாரணைகள் மேற்கொள்வதில் சிபிஐக்கு வழங்கியிருந்த பொது அனுமதியை திரும்பப் பெற்றிருந்த மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் இதன் மூலம் இணைந்திருக்கின்றது.