திருநெல்வேலியில் 15 கோடி செலவில் 'பொருநை அருங்காட்சியகம்' எனும் பெயர் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றினை அமைக்க உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சிவகளையில் ஒரு முதுமக்கள் தாழியில் மண்ணுடன் கூடிய நெல்மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கரிமக் காலக் கணிப்பு முறையானது அதனை கிமு 1155 ஆண்டைச் சேர்ந்தது என்று கணித்துள்ளது.
இது தொடர்பான ஒரு சோதனை அறிக்கையை அமெரிக்காவின் மியாமியில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகம் வெளியிட்டது.
இந்தக் கண்டுபிடிப்பானது பொருநை ஆறு (தாமிரபரணியின் பண்டையப் பெயர்) நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவியுள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான காலம் இதுவேயாகும்.
இது 2,600 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் வைகை நதி நாகரிகத்தை விட மிகவும் பழமையானது ஆகும்.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியானது, கங்கை நாகரிகத்திற்குச் சமமான காலத்தில் வைகை ஆற்றங்கரையில் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்தது என்பதையும் காண்பித்துள்ளது.
சமீபத்தியக் கண்டுபிடிப்பானது விந்திய மலையின் தெற்கில் உள்ள நாகரிகங்களுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையிலான இடைவெளியை மீண்டும் குறைத்துள்ளது.
முன்னர் தென்னிந்தியாவில் நகர நாகரிகம் எதுவும் இல்லை என்று நம்பப்பட்டது.
இந்திய துணைக் கண்டத்தில் முதல் நகரமயமாக்கல் சிந்து சமவெளி நாகரிகத்தில் நடந்தது.
இரண்டாவது நகரமயமாக்கல் மௌரியர் காலத்தின் முடிவில் கங்கைக் கரையில் நிகழ்ந்தது.
மௌரியர் காலத்திற்கு முன்பே, ஆதிச்சநல்லூரில் வெள்ளி நாணயங்கள் இருந்தன என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளை ஆகிய தளங்கள் அனைத்தும் தற்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டைய பொருநை நதியின் (தாமிரபரணி ஆறு) ஆற்றங்கரையில் உள்ள தளங்கள் ஆகும்.
முன்னதாக, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிமு 980 ஆம் ஆண்டிலும் கூட ஒரு நாகரிகம் செழித்து வளர்ந்தது என்று தெரிய வைத்தது.
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகியவை வாழ்விடங்களாக இருந்துள்ள அதே சமயம், கொற்கை துறைமுகமாக இருந்துள்ளது.
தமிழ் வேர்களைத் தேடி மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக, கேரளாவில் பட்டணம் என்று அழைக்கப்படும் முசிறி என்ற ஒரு பழமையான துறைமுகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இதே போன்ற ஆய்வுகள் ஆந்திராவின் வெங்கி, கர்நாடகாவின் தலைக்காடு மற்றும் ஒரிசாவின் பாலூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
எகிப்தில் உள்ள பெர்னிகா அனெக்கே மற்றும் குசேர் அல்-காதிம் ஆகிய இடங்களில் மாநிலத் தொல்லியல் துறை ஆராய்ச்சியினை நடத்தும்.
இது ஒரு காலத்தில் ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாகவும் மேலும் ஓமனில் உள்ள கோர் ரோரி என்ற ஆட்சியிலும் இருந்தது.
இது அந்த நாடுகளுடன் தமிழர்களின் வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்காக வேண்டி அமைக்கப் பட்டது.
இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற சோழ மன்னர் இராஜேந்திரன் ஆதிக்கம் செலுத்திய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆய்வுகள் நடத்தப் படும்.