இரண்டு அமெரிக்கப் பொருளாதார அறிஞர்களான பால் R மில்குரோம் மற்றும் ராபர்ட் B வில்சன் ஆகியோர் இந்த ஆண்டின் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசினைக் கூட்டாக வென்றுள்ளனர்.
இந்த விருதானது இவர்களின் ஏலக் கோட்பாடு மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக வேண்டி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் ரேடியோ அதிர்வெண்கள் போன்ற பாரம்பரியமான முறையில் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதற்கு கடினமாக உள்ள வடிவத்திற்குப் பதிலாக ஒரு புதிய ஏல வடிவத்தை வடிவமைத்ததற்காக தங்களது கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.
இவர்களது கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் வரிசெலுத்துவோர்களுக்குப் பயனளித்து இருக்கின்றன.