பொறுப்புணர்வு மிக்க வகையிலான நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் உற்பத்திக்கான சான்றிதழ்
July 6 , 2023 383 days 170 0
இந்தியாவில் பொறுப்புணர்வுமிக்க வகையிலான நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் உற்பத்தியினை ஊக்குவிக்கும் புதிய சான்றிதழ் வழங்கீட்டுத் திட்டமானது பிரிட்டிஷ் தரநிலை நிறுவனம் (BSI) மற்றும் AMR இண்டஸ்ட்ரி அலையன்ஸ் ஆகியவற்றினால் தொடங்கப் பட்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் தயாரிப்புச் செயல்முறையில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கல்களைக் கண்காணிப்பதற்கான மூன்றாம் தரப்புச் சரிபார்ப்புச் செயல் முறையுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பொறுப்புணர்வுமிக்க வகையிலான நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் உற்பத்தியானது நிலையான மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதில் முக்கியமானதாகும்.
இது நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்களின் கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் நீர்நிலைகளில் வெளியிடப் படுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு தொடர்பான வளர்ந்து வரும் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்தச் சிக்கல்களை நிவர்த்தி செய்கிறது.