நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்யா சென் போட்லே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலக்கியம், கலாச்சராம், அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியோருக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் உலகப் புகழ்பெற்ற போட்லியன் நூலகத்தினால் இந்த விருது வழங்கப்படுகிறது.
1998 ஆம் ஆண்டில் பொருளாதார நலன்கள் மற்றும் சமூக வாய்ப்பு கோட்பாடுகளில் இவரது பணிக்காக பொருளாதார அறிவியல் பிரிவில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.