TNPSC Thervupettagam

போதை மருந்து சட்ட அமலாக்கத்தின் மீதான தேசிய மாநாடு

March 25 , 2018 2310 days 1069 0
  • 2 நாட்கள் நடத்தப்படும் போதை மருந்து சட்ட அமலாக்கத்தின் மீதான தேசிய மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்தியுள்ளது.
  • மேற்கில் தங்க பிறை (Golden crescent), கிழக்கில் தங்க முக்கோணம் (Golden Triangle) ஆகிய உலகின் மிகப்பெரிய ஓப்பியம் (போதைப்பொருள்) உற்பத்தி செய்யும் மண்டலங்களை அருகில்  கொண்டுள்ளதால் போதைப் பொருள் கடத்தலில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இந்தியா உள்ளது.
  • இம்மாநாடு இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலின் பரந்த சூழல் (Wider Context of drug trafficking in India), நிதியியல் புலனாய்வுகள் மற்றும் வெளிநாடு & சைபர் புலனாய்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

அரசின் நடவடிக்கைகள்

  • போதைப் பொருள் ஒருங்கிணைப்பு மையத்தை நவம்பர் 2016ல் அரசு அமைத்ததோடு, போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு நிதியியல் உதவியளிக்கும் திட்டத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளது.
  • 2017-ல் ஏழு புதியப் பொருட்களை போதைப் பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
  • கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா போதைப் பொருட்கள் தொடர்பாக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொசாம்பிக், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் 5 அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  செய்துள்ளது.
  • போதைப் பொருள் தடுப்பு நிறுவனம், புதிய மென்பொருட்களைத் தயாரிப்பதற்காக நிதியளிக்கிறது. அதாவது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் தகவல்கள் மேம்பாட்டு அமைப்பை உருவாக்குதல். இவ்வமைப்பு போதைப் பொருள் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய முழு நேரடியான இணையதள தரவுத்தளத்தை உருவாக்கும்.
  • சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் மற்றும் உளவியல் சம்பந்தமான பொருட்கள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக ஏற்படும் செலவுகளை சந்திப்பதற்காக, போதைப் பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய நிதியம் ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்