2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதியன்று போலோ நடவடிக்கையின் 75வது ஆண்டு நிறைவு விழாவை இந்தியா கொண்டாடியது.
1948 ஆம் ஆண்டில் இந்த நாளில் இந்திய இராணுவமானது ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதற்காக வேண்டி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
ஹைதராபாத் சமஸ்தானத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ராணுவத் தாக்குதலை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் ‘காவல்துறை நடவடிக்கை’ என்று அழைத்தார்.
ஹைதராபாத் நிஜாமின் ராணுவப் படைகள் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று இந்திய இராணுவத்திடம் சரணடைந்தன.