இயற்பியல் பேராசிரியர், தீபக் தார் போல்ட்ஸ்மேன் பதக்கத்தினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
புள்ளியியல் இயற்பியல் (statistical physics) துறையில் ஆற்றப்படும் பங்களிப்பிற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சர்வதேச தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியல் ஒன்றியத்தின் புள்ளியியல் – இயற்பியல் ஆணையத்தினால் இந்தப் பதக்கமானது வழங்கப் படுகிறது.
இதற்கான விழாவானது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஸ்டாட்பிஸ்28 (StatPhys28) மாநாட்டின் போது நடத்தப்படும்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஜான்.J. ஹோஃபீல்டு என்பவரும் இவருடன் சேர்ந்து இந்தப் பதக்கத்தினைப் பெற உள்ளார்.
பேராசிரியர் தார் தற்போது புனேவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியராக உள்ளார்.