சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பாலி, பிராகிருதம், செம்மொழி கன்னடம் , செம்மொழி தெலுங்கு, செம்மொழி மலையாளம், செம்மொழி ஒடியா ஆகிய மொழிகளின் அறிஞர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான மகரிஷி பத்ரயான் வியாஸ் சம்மான் விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இது மேற்கண்ட மொழிகளில் அவர்களின் கணிசமான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக வருடத்திற்கொரு முறை சுதந்திரத் தினத்தன்று வழங்கப்படுகின்றது.
இது 2002 ஆம் ஆண்டில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட விருதாகும்.
இது 30 முதல் 45 வயதிற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்படும் இளம் அறிஞர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மேலும் இதுதவிர, சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பாலி, பிராகிருதம், செம்மொழி மலையாளம், செம்மொழி ஒடியா, செம்மொழி கன்னடம் ஆகிய மொழி அறிஞர்களுக்கு கௌரவச்சான்றிதழையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
1958 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் அரபு மொழிகளின் அறிஞர்களை கவுரவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது பின்னர் 1996 ஆம் ஆண்டில் பாலி பிராகிருதம் மற்றும் ஆகிய மொழிகளையும் உள்ளடக்கியது.
இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அறிஞர்களுக்கு வழங்கப் படுகின்றது.