மாநிலங்களவையானது செப்டம்பர் 21 ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்குவதற்கு வழிவகை செய்யும் மசோதாவினை ஒருமனதாக நிறைவேற்றியது.
இது மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லியின் சட்டமன்றம் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.
இந்த மசோதாவானது செப்டம்பர் 20 ஆம் தேதியன்று மக்களவையில் நிறைவேற்றப் பட்டது.
புதியப் பாராளுமன்றக் கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுவாகும்.